3853.
|
வெண்மதி
தவழ்மதில் மிழலையு ளீர்சடை |
|
ஒண்மதி
யணியுடை யீரே
ஒண்மதி யணியுடை யீருமை யுணர்பவர்
கண்மதி மிகுவது கடனே. 1 |
1. பொ-ரை:
விண்ணிலுள்ள வெண்ணிறச் சந்திரனைத்
தொடுமளவு உயர்ந்துள்ள மதில்களையுடைய திருவீழிமிழலை
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும்,
சடையில் ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ளவருமான
சிவபெருமானே! ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ள உம்மை
முதற்பொருளாக உணர்ந்து வழிபடுபவர்கள் சிவஞானம் பெறுவர்.
கு-ரை:
வெணி மதி - வானில் ஊரும் மதி. சடை மதி -
சடையில் தங்கும் மதி. மதிள் - மதில். ளகரலகர ஒற்றுமை: போலி
என்னலாகாது; சாம்பர் என்பதில் ஈற்றெழுத்து உரியதன்று; லகரனே
உரியது ஆகலின் ரகரம் போலி. ஒற்றுமை அங்ஙனமன்றி மஞ்சள்,
மஞ்சல், மங்களம் மங்கலம் என ஈரெழுத்தும் உரியவாய் வருவது.
மதியைச் சடையில் அணியாக உடையார். அணி - ஆபரணம். கண்
- (உமது திருவடிப் பேற்றையே குறிக்கோளாகக்) கருதும். மதி -
புத்தி. மிகுவது - அதிகரிப்பதும். அவர்க்கு இயல்பாய் எய்திடக்
கூடிய தன்மையாம். கண்மதி - வினைத்தொகை. கண்ணுதல்
இப்பொருளாதலை விண்ணினார்கள் விரும்பப்படுபவன், கண்ணினார் கடம்பூர்க்கரக்கோயிலே
என்னுந் திருக்குறுந்தொகையால் அறிக.
உணர்பவர் - உம்மையே பதிப்பொருளாக உணர்பவர். கடன் -
இயல்பு மாலறியாக் கடனாம் உருவத்தரன் என்ற
திருக்கோவையாரால் அறிக.
|