3855. விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
  வரைமிசை யுறைவதும் வலதே
வரைமிசை யுறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயு மவைமறை யொலியே.              3

    3. பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும்
நீர் பெருமையுடைய கயிலைமலையில் வாழ்வதும் சாமர்த்தியமே. கயிலைமலையில் வாழும் பெருமையுடைய உம்மைப் போற்றிப்
புகழ்வன வேதங்கள்.

     கு-ரை: விரை - வாசனை. ஒரு வரை என்றது கயிலை
மலையை. வலது - திறப்பாடுடையது. வன்மை என்னும்
பகுதியடியாகப் பிறந்த குறிப்பு வினை முற்று. ஈற்றடியின்
பொருளாவது:- நீரே பொருளாந்தன்மையை உலகிற்கு எடுத்து
உரைப்பவை வேதங்களே. அவை வாசகம். அவற்றின் வாச்சியம்
அடிகளீர் என்பது குறிப்பெச்சம்.