3858. |
விரைமலி
பொழிலணி மிழலையு ளீர்செனி |
|
நிறையுற
வணிவது நெறியே
நிறையுற வணிகதொர் நெறியுடை யீரும
தரையுற வணிகவன வரவே. 6 |
6.
பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளியுள்ளவரும், மண்டையோட்டால் ஆகிய மாலையை
அணிந்துள்ளவருமான ஆளுகையையுடைய சிவபெருமானே! அவ்வாறு தலை மாலை அணிந்து ஆளுகை உடைய
நீவிர் உமது அரையில்
கச்சாகக் கட்டியது அரவமே.
கு-ரை:
செ(ன்)னி நிரை - தலைமாலை. நிரை - வரிசை.
வரிசையாகக் கோத்த மாலையையுணர்த்தலால் பண்பாகுபெயர்,
மண்டையோட்டைக் கோத்தணிந்தது. நெறியே - முறையேபோலும்,
நெறியென்றது அமுது உண்டும் வானவர் சாவ, விடமுண்டும்
சாவான்தான் ஒருவனே எனத் தெரிவித்தற்கு, உமது அரை உற:
அணிவதும் அரவே. அரை நாண் ஆகவும் கச்சையாகவும்,
கோவணமாகவும் அணிந்தமையால், அணிவன எனப் பன்மையாற்
கூறினர். அரவு:- (அரவுகள்) பால் பகா அஃறிணைப்பெயர்.
|