| 
         
          | 3862. | வித்தக 
            மறையவர் மிழலையு ளீரன்று |   
          |  | புத்தரொ 
            டமணழித் தீரே புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்
 பத்திசெய் மனமுடை யவரே.                 10
 |  
      
            10. 
        பொ-ரை: நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் வாழும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளுகின்றவரும், புத்தமும், சமணமும் வீழுமாறு
 செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு புத்தமும், சமணமும்
 வீழ்ச்சியடையும்படி செய்த உம்மைப் போற்றுபவர்களே பத்தியுடைய
 நன்மனம் உடையவர்கள்.
       கு-ரை: 
        பத்திசெய் மனம் உடையோரே உம்மைப் போற்றத்தக்கவர் என்றது ஈற்றடியின் கருத்து. ஏனையோர் உம்மால்
 நக்கு நிற்கப்படுவோர் ஆவர் என்பது குறிப்பு. பொக்கமிக்கவர் பூவு
 நீரும் கண்டு நக்கு நிறபர் அவர்தமை நாணியே (தி.5ப.90.பா.9.)
 |