3864. முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
  பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்க ளுலகிலா வாரே.                    1

     1. பொ-ரை: பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு
அதிர்ந்து பேரோசை ஏழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய
சிவபெருமானே! மழுப்படையையுடைய உம்மைப் போற்றி
வணங்குபவர்கள் உலகினில் அரசர்கள் ஆவர்

.      கு-ரை: பூசை - விழாக்காலங்களில் முரசு அதிர்ந்து ஓசை
எழுப்பும் முதுகுன்றம் மேவிய பரசு படை - மழுவாகிய ஆயுதம்
பெயரொட்டு. அமர் - பொருந்திய. உலகில் அரசர்கள் ஆவர்.
இடைப்பிறவரல். பல நாடுகளுக்கு அரசர் ஆவதால் பன்மையாற்
கூறினர்.