3866. |
முழவமம்
பொழிலணி முதுகுன்ற மேவிய |
|
மழவிடை
யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே. 3 |
3.
பொ-ரை: முழவுகள் ஒலிக்கின்றதும், சோலைகளால் அழகு
பெற்றதுமான திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாகவும்
கொடியாகவும் உடைய சிவபெருமானே! இளமைவாய்ந்த இடபத்தை
வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட உம்மை வாழ்த்துபவர்கள்
பழியும், பாவமும் இல்லாதவர்கள் ஆவர்.
கு-ரை:
முழவு அமர்முதுகுன்றம். பொழில் அணி முதுகுன்றம்
என இயைக்க. மழவிடை - இளங்காளை. பகை - இங்குப் பாவம்
என்னும் பொருளிள் வந்தது. பழிக்கு இனம் ஆகலின்.
எண்ணுங்காலும் அதுவதன் மரபே (தொல. சொல்.
கிளவியாக்கம்.47.)
|