| 3896. |
கள்ளி
யிடுதலை யேந்துகை யர்கரி |
| |
காடர்
கண்ணுதலர்
வெள்ளிய கோவண வாடை தன்மேல்
மிளிரா டரவார்த்து
நள்ளிரு ணட்டம தாடுவர் நன்னல
னோங்கு நாரையூர்
உள்ளிய போழ்தி லெம்மேல் வருவல்
வினையாயின வோடுமே. 7 |
7.
பொ-ரை: சிவபெருமான் கள்ளிச் செடிகள் நிறைந்த
சுடுகாட்டில் இடப்பட்ட மண்டையோட்டை ஏந்திய கையையுடையவர்.
சுடுகாட்டில் இருப்பவர். நெற்றிக் கண்ணர். வெண்ணிறக் கோவண
ஆடையை அணிந்து, அதன்மேல் ஒளிரும், ஆடுகின்ற பாம்பைக்
கச்சாகக் கட்டி நள்ளிருளில் நடனமாடுபவர். நல்ல நலன்களை
எல்லாம் மேன்மேலும் பெருகத் தருகின்ற திருநாரையூர் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை
நினைத்த மாத்திரத்தில் எம்மேல் வருகின்ற வலிய வினைகள் யாவும்
ஓடிவிடும்.
கு-ரை:
கள்ளி - கள்ளிகளையுடைய மயானத்தில். "கள்ளி
முதுகாட்டிலாடி கண்டாய்" (தி.6.ப.23.பா.4.) இடு - இடப்பட்ட.
தலையேந்துகையர். கரிகாடர் - "கோயில் சுடுகாடு" (தி.8 திருச்சாழல்
-3) ஆகவுடையவர். வெள்ளிய கோவண ஆடை "தூவெளுத்த
கோவணத்தை அரையிலார்த்த கீளானை" (தி.6.ப.67.பா.1.) நன்னலன்
(நல்+நலன்) நல்ல நலங்கள். உள்ளிய போழ்தில் - நினைத்த மாத்திரத்தில். வல்வினை
ஓடும் - ஒளியைக் கண்ட இடத்து இருள்
போல ஓடும்.
|