3970. கருடனை யேறரி யயனோர்காணார்
 

வெருள்விடை யேறிய மயேந்திரரும்
 கருடரு கண்டத்தெங் கயிலையாரும்
அருளனா ரூராதி யானைக்காவே.             4

     4. பொ-ரை: கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும்
காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடபவாகனத்தில் விளங்குகின்ற திருமயேந்திரர், கருநிறக்
கண்டத்தையுடைய திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக்
கொண்ட திருஆரூரர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில்
வீற்றிருந்தருளுபவர்.

     கு-ரை: அரி அயனோர் காணார் - திருமால், பிரமன்
முதலியோரால் காணப்படாதவராகிய. காணார் - செயப்படு பொருள்
விகுதி குன்றிய முற்றெச்சம். வெருள் விடை - பகைவர் அஞ்சத்தக்க
விடை, கருள்தரு கண்டத்து - கருமை பொருந்திய கழுத்தை உடைய. அருளன் - அருளையே திருமேனியாக உடையவன். “உருமேனி
தரித்துக் கொண்ட தென்றலும் உருவிறந்த, அருமேனியதுவுங் கண்டோம், அருவுரு ஆனபோது, திருமேனி உபயம் பெற்றோம்
செப்பிய மூன்று நந்தம், கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவு
காணே.” (சித்தியார். சூத்.1.55.)