3970. |
கருடனை
யேறரி யயனோர்காணார் |
|
வெருள்விடை யேறிய
மயேந்திரரும்
கருடரு
கண்டத்தெங் கயிலையாரும்
அருளனா ரூராதி யானைக்காவே. 4
|
4.
பொ-ரை: கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும்
காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடபவாகனத்தில்
விளங்குகின்ற திருமயேந்திரர், கருநிறக்
கண்டத்தையுடைய திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக்
கொண்ட திருஆரூரர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில்
வீற்றிருந்தருளுபவர்.
கு-ரை:
அரி அயனோர் காணார் - திருமால், பிரமன்
முதலியோரால் காணப்படாதவராகிய. காணார் - செயப்படு பொருள்
விகுதி குன்றிய முற்றெச்சம். வெருள் விடை - பகைவர் அஞ்சத்தக்க
விடை, கருள்தரு கண்டத்து - கருமை பொருந்திய கழுத்தை உடைய. அருளன் - அருளையே திருமேனியாக
உடையவன். உருமேனி
தரித்துக் கொண்ட தென்றலும் உருவிறந்த, அருமேனியதுவுங் கண்டோம், அருவுரு ஆனபோது,
திருமேனி உபயம் பெற்றோம்
செப்பிய மூன்று நந்தம், கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவு
காணே. (சித்தியார். சூத்.1.55.)
|