3971. மதுசூதன் நான்முகன் வணங்கரியார்
  மதியது சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியனா ரூராதி யானைக்காவே.             5

     5. பொ-ரை: மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய
திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர்
சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர
மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய
கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர்.
எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே
ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: மது சூதனன் - மது என்னும் அசுரனைக்
கொன்றவனாகிய திருமால் வணங்கரியார். (வணங்க + அரியார்).
மதியது சொல்லிய மயேந்திரரும் - ஆகமங்களை உபதேசித்தருளிய
மகேந்திர மலையில் எழுந்தருளியிருப்பவரும். அது “மன்னுமாமலை
மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”
(திருவாசகம் கீர்த்தித் திருவககல். அடி 9 - 10.) கதிர் முலை
புல்கிய - ஒளிபொருந்திய தனபாரங்களை உடைய உமாதேவியார்
ழுவிய. அதியன் - எவர்க்கும் மேம்பட்டவனாகிய சிவபெருமான்.
“யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்” என்பது திருவாசகம்.
அதியன், வடசொல் அடியாகப் பிறந்த பெயர்ப்பகுபதம்.