3971. |
மதுசூதன்
நான்முகன் வணங்கரியார் |
|
மதியது
சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியனா ரூராதி யானைக்காவே. 5 |
5.
பொ-ரை: மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய
திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர்
சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர
மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய
கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர்.
எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே
ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
மது சூதனன் - மது என்னும் அசுரனைக்
கொன்றவனாகிய திருமால் வணங்கரியார். (வணங்க + அரியார்).
மதியது சொல்லிய மயேந்திரரும் - ஆகமங்களை உபதேசித்தருளிய
மகேந்திர மலையில் எழுந்தருளியிருப்பவரும். அது மன்னுமாமலை
மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்
(திருவாசகம் கீர்த்தித் திருவககல். அடி 9 - 10.) கதிர் முலை
புல்கிய - ஒளிபொருந்திய
தனபாரங்களை உடைய உமாதேவியார்
ழுவிய. அதியன் - எவர்க்கும் மேம்பட்டவனாகிய சிவபெருமான்.
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் என்பது திருவாசகம்.
அதியன், வடசொல் அடியாகப் பிறந்த பெயர்ப்பகுபதம்.
|