3972. |
சக்கரம்
வேண்டுமால் பிரமன்காணா |
|
மிக்கவர்
கயிலை மயேந்திரரும்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூ ரானைக்காவே. 6 |
6.
பொ-ரை: சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும்,
பிரமனும் காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான
சிவபெருமான், திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும்
வீற்றிருந்தருளுகின்றார். அவர் தக்கனின் தலையை அரிந்தவர்.
நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை அணிந்தவர். திருவாரூரிலும்,
திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர்.
கு-ரை:
சக்கரம் வேண்டும் மால் - சக்கராயுதத்தை வேண்டிப்
பெற்ற திருமாலும். காணா - காணப்படாத. மிக்கவர் - யாவரினும்
மேம்பட்டவராகிய. அக்கு அணியவர் - உருத்திராக்கங்களை
அணியாகக் கொண்டவர்.
|