3973. கண்ணனு நான்முகன் காண்பரியார்
  வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணலா ரூராதி யானைக்காவே.            7

     7. பொ-ரை: கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த
கயிலைநாதர். எங்கள் தலைவரான திருவாரூரர். அவர் வெண்ணாவல்
மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும் திருவானைக்காவிலுள்ள
ஆதிமூர்த்தி ஆவார்.

     கு-ரை: கண்ணன் - கரிய நிறத்தையுடைய திருமால்.
கிருட்டிணன் என்பதன் சிதைவு.