|  
       
         
          | 3979. | சேணுலாமதில் 
            வேணுமண்ணுளோர் |   
          |  | காணமன்றலார் 
            வேணுநற்புரத் தாணுவின்கழல் பேணுகின்றவ
 ராணியொத் தவரே.                    2
 |  
         2.பொ-ரை: 
      ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர்
 காணும்படி அமைந்த, நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும்
 நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின்
 திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று
 சிறந்தவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        சேண் உலாம் மதில் - ஆகாயத்தை அளாவிய மதில். வேணு - விண்ணுளோர் இறங்குவதற்கு வைத்த மூங்கிலால் செய்த
 ஏணியைப் போல். மண்ணுளோர் காண - பூவுலகில் உள்ளோர்
 காணும்படி (பொருந்திய). மன்றல் ஆர் - வாசனை மிகுந்த.
 வேணுபுரத்தில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடிகளைப்
 பாராட்டிப் போற்றுபவர் யாவரும் சிறந்தவராவர் என்பர் பிற்
 பகுதியின் பொழிப்பு. பொருந்திய என ஒரு சொல் வருவிக்க. தாணு
 - சிவபெருமான். ஆணி - உரையாணிப்பொன்.
 |