| 
         
          | 3984. | சுரபுரத்தினைத் 
            துயர்செய்தாரகன் |   
          |  | துஞ்சவெஞ்சினக் 
            காளியைத்தருஞ் சிரபுரத்துளா னென்னவல்லவர்
 சித்திபெற் றவரே.                     7
 |  
            7.பொ-ரை: 
        தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின்
 அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும்
 சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள்
 அனைத்தும் பெறுவர்.
       கு-ரை: 
        சுரபுரத்தினை - தேவருலகை. துயர்செய் - துன்புறுத்திய (தாரகன்) அசுரர்களுக்குப் பற்றுக் கோடாயிருந்த
 மகிடாசுரன் ஒழியத் துர்க்கையை அம்பிகையின் அம்சத்தினின்றும்
 தோற்றுவித்தருளிய, சிரபுரத்திலுள்ள சிவன் என்ன அட்டமா
 சித்திகளும் கைகூடும். புரம் - இங்கு உலகு என்னும் பொருளில்
 வந்தது.
 |