| 
         
          | 3985. | உறவுமாகியற் 
            றவர்களுக்குமா |   
          |  | நெதிகொடுத்துநீள் 
            புவியிலங்குசீர்ப் புறவமாநகர்க் கிறைவனேயெனத்
 தெறகிலா வினையே.                   
            8
 |          8.பொ-ரை: 
        வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற, இந்த
 நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும்
 மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி
 வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா.
       கு-ரை: 
        அற்றவர்க்கு - வறியோர்க்கு. உறவும் ஆகி - (தம் செல்வப் பெருக்கைக் கருதாது) உறவினர்போல ஆகியும். மாநெதி
 கொடுத்து - மிக்க செல்வத்தைக் கொடுத்து. நீள்புவி இலங்குசீர் -
 (இவ்வாறு உதவி புரிந்துவரும் தன்மையால்.) நெடிய பூமி முழுதும்
 புகழ் விளங்கும், புறவமாநகர். தெறகிலா வினை - அழிக்க வந்த
 வினை (தாம், அழிந்துவிடும்).
 |