| 
         
          | 3986. | பண்புசேரிலங் 
            கைக்குநாதனன் |   
          |  | முடிகள்பத்தையுங் 
            கெடநெரித்தவன் சண்பையாதியைத் தொழுமவர்களைச்
 சாதியா வினையே.                    9
 |  
            9. 
        பொ-ரை: பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் 
        நெரித்த, திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத்
 தொழுபவர்கள் வினைகள் துன்புறுத்தா. வலியிழந்துபோம்.
       கு-ரை: 
        பண்புசேர் இலங்கைக்கு நாதன் என்றது - எழில் செய் கூகை (சிந்தாமணி.102) போலக் கொள்க. சாதியா -
 துன்புறுத்தா.
 |