3986. பண்புசேரிலங் கைக்குநாதனன்
       முடிகள்பத்தையுங் கெடநெரித்தவன்
சண்பையாதியைத் தொழுமவர்களைச்
     சாதியா வினையே.                    9

     9. பொ-ரை: பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த, திருச்சண்பை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத்
தொழுபவர்கள் வினைகள் துன்புறுத்தா. வலியிழந்துபோம்.

     கு-ரை: பண்புசேர் இலங்கைக்கு நாதன் என்றது - “எழில்
செய் கூகை” (சிந்தாமணி.102) போலக் கொள்க. சாதியா -
துன்புறுத்தா.