3987. ஆழியங்கையிற் கொண்டமாலய
       னறிவொணாததோர் வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுணாமமே
     கற்றல்நற் றவமே.                    10

     10. பொ-ரை: சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட
திருமாலும், பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு
வடிவாய் நின்றவனும், சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும்.

     கு-ரை: கடவுள் நாமமே கற்றல் நல்தவம் - கடவுளின்
புகழைக் கற்றலே நல்ல தவமாகும்.