3988. விச்சையொன்றிலாச் சமணர்சாக்கியப்
       பிச்சர்தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர்
     குணங்கள் கூறுமினே.                 11

     11. பொ-ரை: மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத
சமணர், புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து
அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள்.

     கு-ரை: விச்சை யொன்று இலா - மெய்யுணர்வு வரும்
கல்வியறிவு ஒரு சிறிதுமில்லாத. பிச்சர் பித்தர் என்பதன் போலி.
கரிசு அறுத்தவன் - தீமையாகிய வேரையறுத்தவன், அன்பு
செய்பவர் குணங்கள் கூறுமின்! “நல்லார் குணங்களுரைப்பதுவும்
நன்றே” (மூதுரை.8.)