3992. |
விசையினோடெழு
பசையுநஞ்சினை |
|
யசைவுசெய்தவன்
மிழலைமாநகர்
இசையுமீசனை நசையின்மேவினான்
மிசைசெயா வினையே. 3 |
3.
பொ-ரை: வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய
விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது
புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால்
வினையானது துன்பம் செய்யாது.
கு-ரை:
விசையினொடு எழு - வேகமாகப் பரவிய. பசையும்
நஞ்சினை - பற்றிக் கொல்லும் விடத்தை. அசைவு செய்தவன் -
உண்டவன். நசையின் மேவினால் - விருப்பத்தோடு அடைந்தால்.
மிசை - மிகை; தீங்கு.
|