3992. விசையினோடெழு பசையுநஞ்சினை
       யசைவுசெய்தவன் மிழலைமாநகர்
இசையுமீசனை நசையின்மேவினான்
     மிசைசெயா வினையே.                 3

     3. பொ-ரை: வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய
விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது
புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால்
வினையானது துன்பம் செய்யாது.

     கு-ரை: விசையினொடு எழு - வேகமாகப் பரவிய. பசையும்
நஞ்சினை - பற்றிக் கொல்லும் விடத்தை. அசைவு செய்தவன் -
உண்டவன். நசையின் மேவினால் - விருப்பத்தோடு அடைந்தால்.
மிசை - மிகை; தீங்கு.