| 3993. |
வென்றிசேர்கொடி
மூடுமாமதிண் |
| |
மிழலைமாநகர்
மேவிநாடொறும்
நின்றவாதிதன் னடிநினைப்பவர்
துன்பமொன் றிலரே. 4 |
4.
பொ-ரை: சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை
மூடும்படி விளங்கும், உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழிலை
என்னும் மாநகர். அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு
வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும்
நினைத்து வழிபடுபவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.
கு-ரை:
வென்றிசேர் கொடி - வெற்றியினால் எடுத்த
கொடிகள். மூடும் - வானை மூடுகின்ற. மாமதில் - உயர்ந்த
மதிலையுடைய. நாடொறும் நின்ற - என்றும் நிலைபெற்று நின்ற.
ஒன்று - ஒரு சிறிதும்.
|