3996.. போரணாவுமுப் புரமெரித்தவன்
       பொழில்கள்சூழ்தரு மிழலைமாநகர்ச்
சேருமீசனைச் சிந்தைசெய்பவர்
     தீவினை கெடுமே.                    7

     7. பொ-ரை: போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்
கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான்,
சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும்
அடியவர்களின் தீவினை அழிந்துவிடும்.

     கு-ரை: போர் அணாவு - போரை மேற்கொண்ட.