3997. |
இரக்கமிஃறொழி
லரக்கனாருட |
|
னெருக்கினான்மிகு
மிழலையானடி
சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ்
பரக்குநீள் புவியே. 8 |
8.
பொ-ரை: இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான
இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த
சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிக் கமலங்களை
சிரசின்மேல் வைத்த மலர்போலக் கொண்டு, சிந்தையை
ஒருமுகப்படுத்தி வழிபடுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவர்.
கு-ரை:
இரக்கமிஃறொழில் (இரக்கம் இல் தொழில்) - குறில்
வழி லளத்தவ் அணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம்
அல்வழியானே (நன்னூல். 228) என்பது விதி. சிரக்கொள் பூவென
(சிரம்கொள் பூவென) - தலையில் அணியும் பூவைப்போல. எதுகை
நோக்கி சிரக்கொள் என வலித்தது. ஒருக்கினார் - சிந்தையை
ஒருமைப் படுத்தினவர்.
|