3998. |
துன்றுபூமகன்
பன்றியானவ |
|
னொன்றுமோர்கிலா
மிழலையானடி
சென்றுபூம்புன னின்றுதூவினார்
நன்றுசேர் பவரே. 9 |
9.
பொ-ரை: இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும்
பிரமனும், பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவ
பெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானின் திருவடிகளை, பூவும்,
நீரும் கொண்டு பூசிப்பவர்கள், முத்தி பெறுவர்.
கு-ரை:
துன்று பூமகன் - (பூ துன்று மகன்) பூவில் வாழும்
பிரமன். சென்று - திருவீழிமிழலைக்குச் சென்று. மிழலையானடி -
அக் கடவுளின் திருவடிகளில். பூம் புனல் தூவினார் - பூவையும்
நீரையும் தூவினவர்கள். பூம் புனல் - பூவும் நீரும். பூவோடு நீர்
கூறுவதை பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு (தி.5.ப.90.பா.9)
எனவும், போதொடு நீர் சுமந்தேத்தி (தி.4.ப.3.பா.1) எனவும்
வருவன கண்டு அறிக. நன்று சேர்பவர் - முத்தி அடைபவர்.
|