| 
         
          | 3999. | புத்தர்கைச்சமண் 
            பித்தர்பொய்க்குவை |   
          |  | வைத்தவித்தகன் 
            மிழலைமாநகர் சித்தம்வைத்தவ ரித்தலத்தினுண்
 மெய்த்தவத் தவரே.                   10
 |  
             10. 
        பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய்க் குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான
 சிவபெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் மீது சித்தம் வைத்து
 வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர்.
       கு-ரை: 
        கை - அற்பத்தனத்தை உடைய. சமண் பித்தர் - பித்தர் ஆகிய சமணர். ஏதம் கொண்டு ஊதியம் போக விடுதலின்
 பித்தர் என்பார். பொய்க்குவை வைத்த வித்தகன் - பொய்க்
 குவியலாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த சாமர்த்தியசாலி.
 வித்தகன் - ஞானசொரூபர்.
 |