3999. |
புத்தர்கைச்சமண்
பித்தர்பொய்க்குவை |
|
வைத்தவித்தகன்
மிழலைமாநகர்
சித்தம்வைத்தவ ரித்தலத்தினுண்
மெய்த்தவத் தவரே. 10 |
10.
பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய்க்
குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான
சிவபெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் மீது சித்தம் வைத்து
வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர்.
கு-ரை:
கை - அற்பத்தனத்தை உடைய. சமண் பித்தர் -
பித்தர் ஆகிய சமணர். ஏதம் கொண்டு ஊதியம் போக விடுதலின்
பித்தர் என்பார். பொய்க்குவை வைத்த வித்தகன் - பொய்க்
குவியலாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த சாமர்த்தியசாலி.
வித்தகன் - ஞானசொரூபர்.
|