| 
         
          | 4000. | சந்தமார்பொழின் 
            மிழலையீசனைச் |   
          |  | சண்பைஞானசம் 
            பந்தன்வாய்நவில் பந்தமார்தமிழ் பத்தும்வல்லவர்
 பத்தரா குவரே.                      11
 |      11. 
        பொ-ரை: சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
 சிவபெருமானைப் போற்றி, சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர்
 அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை
 ஓதவல்லவர்கள் பத்தர்கள் ஆவர்.
       கு-ரை: 
        சந்தம் ஆர் பொழில் - சந்தன மரங்கள் நிறைந்த சோலை. பந்தம் ஆர் தமிழ் - கேட்டார்ப் பிணிக்கும் தகையவாயின
 தமிழ்.
 |