4002.
|
பட்டநெற்றியர்
நட்டமாடுவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 2 |
2.
பொ-ரை: தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள
அணிகலன் அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர்.
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுபவர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை
யாவரே அறிவார்?
கு-ரை:
பட்டம் வீரர் நெற்றியில் அணியும் ஓர் அணிகலன்.
அது இராமாயணத்தில் நுதலணி ஓடையில் பிறங்கும் வீரபட்டிகை
என வருவதால் அறிக. நட்டம் - திருக்கூத்து.
|