4005. பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெல்லியாட் டுகந்தார்
     இவர்தன்மை யறிவாரார்.                5

     5. பொ-ரை: சிவபெருமான் பற்களே இல்லாத
மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம்
ஆடுதலை விரும்புபவர். இவர் தன்மை யார் அறிவார்?

     கு-ரை: பல்லில் ஓட்டினர் - பல் இல்லாத மண்டை ஓட்டைப்
பிச்சைப் பாத்திரமாக உடையவர். எல்லி ஆட்டு உகந்தார் - இரவில்
ஆடுதலில் விருப்பம் உடையவர். ஆட்டு - முதனிலை திரிந்த
தொழிற் பெயர்.