4005. |
பல்லிலோட்டினர்
பலிகொண்டுண்பவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தெல்லியாட் டுகந்தார்
இவர்தன்மை யறிவாரார். 5 |
5.
பொ-ரை: சிவபெருமான் பற்களே இல்லாத
மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம்
ஆடுதலை விரும்புபவர். இவர் தன்மை யார் அறிவார்?
கு-ரை:
பல்லில் ஓட்டினர் - பல் இல்லாத மண்டை ஓட்டைப்
பிச்சைப் பாத்திரமாக உடையவர். எல்லி ஆட்டு உகந்தார் - இரவில்
ஆடுதலில் விருப்பம் உடையவர். ஆட்டு - முதனிலை திரிந்த
தொழிற் பெயர்.
|