4007. பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               7

     7. பொ-ரை: இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல்
ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும்
வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்?

     கு-ரை: எங்குமாய்ப் பல்லவனீச்சரத்து இருப்பார் என்றது:-
அகண்டிதன் ஆகி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
அடியாரை ஆட்கொள்வான் வேண்டி, குருலிங்கசங்கமங்களில்
கண்டனாய்த் தோன்றும் தன்மை விளக்கியவாறு. கண்டன் சிறு
அளவில் காணப்படுபவன். “கண்டனைக் கண்டிராதே காலத்தைக்
கழித்தவாறே” என்ற திருநேரிசையால் அறிக.