| 
         
          | 4008. | பாதங்கைதொழ 
            வேதமோதுவர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தாதியா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               8
 |        8. 
        பொ-ரை: தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார். காவிரிப்பூம்பட்டினத்துப் 
        பல்லவனீச்சரத்தில்
 விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது
 தன்மையை யார் அறிவார்?
      கு-ரை: 
        பாதம் கை தொழ - தமது திருவடிகளைக் கையால் தொழுது உய்தி கூடும் பொருட்டு. வேதம் ஓதுவார் - வேதம்
 முதலிய நீதிகளை உபதேசித்தருள்பவர். வேதம், என்பது
 உபலட்சணம்.
 |