4009. |
படிகொண்மேனியர்
கடிகொள்கொன்றையர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 9 |
9.
பொ-ரை: இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு மேனியாகக்
கொண்டவர். நறுமணம் கமழும் கொன்றை மாலையை
அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார்
அறிவார்?
கு-ரை:
படிகொள் - பல்வேறு வடிவங்களில் திருவுடம்பு
கொள்பவர். கடி - வாசனை.
|