4047. |
ஓதி
வாயதும் மறைகளே |
|
யுரைப்ப
தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே
பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே
காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா
மிழலை மேவிய வேதியா. 2 |
2.
பொ-ரை: சிவபெருமான் ஓதுவன வேதங்களே. உரைப்பது
பிறர் எவர்க்கும் தெரிவதற்கரிய பொருள்களே. திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டது உமாதேவியை. வழிபடுகின்றேன் அவ்வழகிய
கோலத்தை. காதிலே அணிந்திருப்பது கனவிய குழை. அவர்
தம்மிடத்து அன்பு செலுத்துபவர்களிடத்துக் குழைந்து நிற்பர்.
வீதியிலே மிகுவது வேதஒலி. வேதங்களை அருளிச் செய்த
அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில்.
கு-ரை:
மறைகளே - வேதங்களே. மறைகளே - பிறர்
எவர்க்கும் தெரிய அரிய பொருள்கள். மறை - இரகசியம். மாதை -
பெண்ணை. மிகும்மாதை - மிகும் அழகை. குழையர் - குண்டலத்தை
உடையவர். காதலார் - காதல் செய்யும் பெண்களின். கனம் -
மனத்திண்மையை.
|