4052. |
அப்பி
யன்றகண் ணயனுமே |
|
யமரர்
கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே
யொண்கையா லமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே
மிழலை யூரும திருக்கையே
செப்புமின் னெருது மேயுமே
சேர்வுமக் கெருது மேயுமே. 7 |
7.
பொ-ரை: பாற்கடலில், துயிலும் கண்ணுடைய திருமாலும்,
தேவேந்திரனும், பிரமனும் கேட்டவற்றை ஒப்பின்றி உமது திருக்கரம்
வழங்கி வருதலால் அது கற்பக விருட்சம் ஆகும். மெய்த்தவம்
செய்பவர்களின் உள்ளக்கோயில் உமது இருப்பிடமாகும். திருவீழி
மிழலை என்னும் திருத்தலமும் நீர் வீற்றிருந்தருளும் இடமாகும்.
உமக்கென்றுள்ள விளைநிலமாகிய என் மனநிலத்தில் எருது புகுந்து
கேடு விளைவித்தல் தகுமோ? அதை ஓட்டி என்னை ஆட்கொள்ள
அங்கு வருவதற்கு உமக்கு எருதும் இருக்குமே.
கு-ரை:
அப்பு - கடலில். இயன்ற - தூங்குகின்ற, கண் -
கண்ணையுடைய. ஐயனும் - திருமாலும். அயனும் - பிரமனும். ஐயன்
- அயன் என வந்தது போலி. அப்பு - ஆகுபெயர். ஒப்பு இல் -
ஒப்பு இல்லாதது. ஒண் - சிறந்த. கையால் - கையினால், அமரர்தரு
அதே -தேவர்களின் கற்பக
விருட்சமே ஆயினீர். திருமால் முதலிய
தேவர்கட்கெல்லாம் கேட்டவற்றை ஒப்பின்றி வழங்கி வருவதால்
உமது திருக்கரம் கற்பகவிருட்சத்துக்குச் சமமாகும் என்பது
முன்னிரண்டடிகளின் கருத்து. மெய் - மெய்யுணர்தலோடு. பயின்றவர்
- தவம் புரிவோர்களின் உள்ளமே. இருக்கை - உமது இருப்பிடமாம்.
செப்புமின் - சொல்வீராக. எருது மேயுமே - உமக்கென்றுள்ள
விளைபுலமாகிய என் பெண்மை நலத்தில் மன்மதன் அம்பாகிய
எருதுமேயல் ஆகுமா? தலைவிகூற்று. குறிப்புருவகம். சேர்வு - அதை
ஓட்ட அங்கு வருவதற்கு நான்கனுருபுத் தொகை. உமக்கு
எருது ஏயும் - உமக்கு எருதும் இருக்குமே.
|