4112. |
சம்பரற்
கருளிச் சலந்தரன் வீயத் |
|
தழலுமிழ்
சக்கரம் படைத்த
எம்பெரு மானா ரிமையவ ரேத்த
வினிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி யழலுமிழ் புகையி
னாகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ
ருடையவர் வடதளியதுவே. 2 |
2.
பொ-ரை: சம்பரன் என்னும் அசுரனுக்கு அருள்செய்தவரும், சலந்தரன் என்னும்
அசுரன் அழியும்படி நெருப்பினை உமிழ்கின்ற
சக்கரத்தைப் படைத்தவருமான எம் சிவபெருமானார்
தேவர்களெல்லாம் வணங்கிப் போற்ற இனிதாக வீற்றிருந்தருளும்
இடம், வேள்வி ஆற்ற அதன் புகைமண்டலமானது ஆகாயத்தினை
அடைந்து மழைபொழிவதும், தேவர்களால் போற்றப்படுகின்றதுமான
திரு ஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும்
திருக்கோயிலாகும்.
கு-ரை:
பொழியும் - ஏத்தும் என்னும் பெயரெச்சங்கள்
ஓமாம்புலியூர் என்னும் பெயர் கொண்டு முடிந்தது.
|