| 
         
          | 4126. | பரிந்துநன் 
            மனத்தால் வழிபடுமாணி |   
          |  | தன்னுயிர் 
            மேல்வரும் கூற்றைத் திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ்
 செம்மையார் நம்மையா ளுடையார்
 விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை
 வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
 குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ்
 கோணமா மலையமர்ந் தாரே.           6
 |        6. 
        பொ-ரை: பக்தி பெருகும் நல்ல மனத்தால் அன்பு பெருக வழிபடும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனை, இறை
 வழிபாடு வினைப்பலனைச் சாராமல் காக்கும் என்ற சைவக்
 கொள்கைக்கு முரண்படாவண்ணம் உதைத்துப் பாலனுக்கு
 அருள்புரிந்த செம்மையான திறமுடையவர் சிவபெருமான்.
 ஆன்மாக்கள் ஆகிய நம்மை ஆட்கொள்பவர். அப்பெருமான்
 விரிந்துயர்ந்த மல்லிகை, மாதவி, புன்னை, வேங்கை, செருந்தி,
 செண்பகம், முல்லை ஆகியவை விளங்கும் சோலைகள் சூழ்ந்த
 திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        மௌவல் - முல்லை. |