| 
         
          | 4131. | சுண்ணவெண் 
            ணீறணி மார்பில் தோல்புனைந் |   
          |  | தெண்ணரும் 
            பல்கண மேத்தநின் றாடுவர் விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
 பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.        1
 |  
            1. 
        பொ-ரை: சிவபெருமான் பொடியாகிய வெண்ணிறத் திருநீற்றினை அணிந்த மார்பில் யானைத் தோலைப் போர்த்திக்
 கொண்டு எண்ணுதற்கரிய பல கணங்களும் போற்ற நடனம்
 செய்வார். அத்தகைய சிவபெருமான் தேவர்களும் விரும்பும்
 பசுமையான சோலைகள் சூழ்ந்த திருக்குருகாவூரில் வெள்ளடை
 என்னும் கோயிலில், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு
 விரும்பி வீற்றிருந்தருளும் தலைக்கோலமுடையவர்.
      கு-ரை: 
        பதினெண்கணம், பூதகணம், பேய்க்கணம், முனிகணம் உருத்திரபல்கணம் என இவையொவ்வொன்றிலும் பல ஆதலின்
 எண்ணரும் பல்கணம் என்றார்.
 |