4132. திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
  வரைமக ளோடுட னாடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாளர வாட்டுகந் தீரே.            2

    2. பொ-ரை: நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய
சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பெருமானே! இடுப்பில் விளங்கும்
ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர். அலைகளையுடைய
கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு
ஆடுகின்றீர்.

     கு-ரை: அரவு ஆட்டு உகந்தீர் - பாம்பை ஆட்டுதலை
விரும்பினீர்.