| 4150. |
கரையார்
கடல்நஞ் சமுதுண் டவர்கங்கைத் |
| |
திரையார்
சடைத்தீ வண்ணர்சேர் விடமென்பர்
குரையார் மணியுங் குளிர்சந் தமுங்கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே. 3 |
3.
பொ-ரை: கரையின் கட்டுப்பட்டிலடங்கிய கடலில்
தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவரும், கங்கையாற்றைச்
சூடியவரும், தீவண்ணருமாகிய சிவபெருமானது இடம், ஒலிக்கும்
நவமணிகளையும் சந்தன மரங்களையும் கொண்டு விரைந்து வரும்
ஆற்றின் நீர் நிறையும், திருவிடைவாய் என்பர்.
|