4152. திரியும் புரமூன் றையுஞ்செந் தழலுண்ண
 

வெரியம் பெய்தகுன் றவில்லி யிடமென்பர்
கிரியுந் தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.    5

     5. பொ-ரை: வானகத்தே திரிந்த திரிபுரங்கள்
செந்தழலுண்ணுமாறு அம்பெய்த, குன்றவில்லியாகிய சிவபெருமானது
இடம், மலை போன்ற மாளிகைகளின் சூளிகைகளில் கட்டப்பெற்று
விரிந்தசையும் கொடிகள் வானவரை அழைப்பது போலசையும்
திருவிடைவாய் என்பர்.