| 
         
          | 4153. | கிள்ளை 
            மொழியா ளையிகழ்ந் தவன்முத்தீத் |   
          |  | தள்ளித் 
            தலைதக் கனைக்கொண் டவர்சார்வாம் வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
 வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே.   6
 |  
            6. 
        பொ-ரை: சிவபெருமானை விலக்கி, பார்வதிதேவியை இகழ்ந்த, தக்கனது தலையைக் கொய்து, பின் அருள் செய்த
 பெருமானது இடம், வள்ளிக் கொடி போன்ற இடையையும்,
 நெருங்கிய தனபாரங்களையும், சிவந்த வாயையும், வெள்ளிய
 பற்களையும் உடைய, மகளிர் நடஞ்செய்யும், திருவிடைவாய்
 என்பர்.
 |