| 
         
          | 4156. | புள்வாய் 
            பிளந்தான் அயன்பூ முடிபாதம் |   
          |  | ஒள்வான் 
            நிலந்தே டும்ஒரு வர்க்கிடமாந் தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
 விள்வாய் நறவுண் டுவண்டார் விடைவாயே.     9
 |  
             9. 
        பொ-ரை: திருமால் பிரமன் ஆகியோர், அடியையும் முடியையும் நிலத்திலும் வானத்திலும் சென்று தேடுமாறு, உயர்ந்து
 நின்ற ஒப்பற்ற சிவபெருமானுக்குரிய இடம், தெளிந்த நீரோடைகளில்
 பூத்த செங்கழுநீர் மலர்களில் உள்ள தேனை, வாய்திறந்து உண்டு
 வண்டுகள் பாடும் திருவிடைவாய் என்பர்.
 |