| தொடக்கம் |
|
|
|
|
4.13 திருஐயாறு பழந்தக்கராகம் |
| 124 | விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும் இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்; தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான், அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 125 | செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர் கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர், வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 126 | நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின் துணியானே! தோலானே! சுண்ண வெண் நீற்றானே! மணியானே! வானவர்க்கு மருந்து ஆகிப் பிணி தீர்க்கும் அணியானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 127 | ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்! வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே! பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம் ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 128 | சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே! விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே! உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும் அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 129 | “நீரானே! தீயானே! நெதியானே! கதியானே! ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே! பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்!” என்று ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 130 | கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்! எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்! விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே! அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 131 | மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்! பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்! நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 132 | முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப் பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த, எத்திசையும் வானவர்கள், “எம்பெருமான்” என இறைஞ்சும் அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 133 | கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத் திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி, பெருவரை சூழ் வையகத்தார், “பேர் நந்தி” என்று ஏத்தும் அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! |
|
உரை
|
| |
|
|