| தொடக்கம் |
|
|
|
|
4.28 திருஅதிகைவீரட்டானம் திருநேரிசை |
| 278 | முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி, கண்கண இருமி, நாளும் கருத்து அழிந்து, அருத்தம் இன்றி, பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்; அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 279 | கறைப் பெருங் கண்டத்தானே! காய் கதிர் நமனை அஞ்சி நிறைப் பெருங்கடலைக் கண்டேன்! நீள்வரை உச்சி கண்டேன்! பிறைப் பெருஞ் சென்னியானே! பிஞ்ஞகா! இவை அனைத்தும் அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
| |
|
|
|
|
| 280 | “நாதனார்” என்ன, நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள் ஏதங்கள் அறிய மாட்டார், “இணை அடி தொழுதோம்” என்பார் ஆதன் ஆனவன் என்றுஎள்கி,- அதிகைவீரட்டனே!-நின் பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 281 | சுடலை சேர் சுண்ண மெய்யர்; சுரும்பு உண விரிந்த கொன்றைப்- படலை சேர் அலங்கல் மார்பர்-பழனம் சேர் கழனித் தெங்கின் மடலை நீர் கிழிய ஓடி அதன் இடை மணிகள் சிந்தும் கெடில வீரட்டம் மேய கிளர் சடைமுடியனாரே |
|
உரை
|
| |
|
|
|
|
| 282 | மந்திரம் உள்ளது ஆக, மறி கடல் எழு நெய் ஆக, இந்திரன் வேள்வித் தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் சிந்திரம் ஆக நோக்கிக் தெருட்டுவார்-தெருட்ட வந்து கந்திரம் முரலும் சோலைக் கானல் அம் கெடிலத்தாரே |
|
உரை
|
| |
|
|
|
|
| 283 | மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி, மெய்ஞ் ஞரம்பு உதிரம் பில்க, விசை தணிந்து, அரக்கன் வீழ்ந்து, கைஞ் ஞரம்பு எழுவிக் கொண்டு, காதலால் இனிது சொன்ன கின்னரம் கேட்டு உகந்தார்-கெடில வீரட்டனாரே. |
|
உரை
|
| |
|
|