தொடக்கம் |
|
|
4.45 திருஒற்றியூர் திருநேரிசை |
444 | வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம் மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால் கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்) உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
445 | வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று, புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில், அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
446 | தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்! ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
447 | காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே, சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
448 | சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி, இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்; கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
449 | ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி; ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
450 | பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள் புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க; நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
451 | பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள் துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின், மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி, உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
452 | முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால் எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
453 | வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே! மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய! பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே. |
|
உரை
|
|
|
|