4.52 திருஆரூர்
திருநேரிசை
498படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்;
முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
499புழுப் பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பது(வ்) வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை;
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய,
அழிப்பனாய் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
500பஞ்சின் மெல் அடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து, நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சு அணி மிடற்றினானே! நாதனே! நம்பனே! நான்
அஞ்சினேற்கு, “அஞ்சல்!” என்னீர்-ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
501கெண்டை அம் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரி தந்து ஐவர் குலைத்து இடர்க் குழியில் நூக்கக்
கண்டு நான் தரிக்ககில்லேன்; காத்துக் கொள்! கறை சேர் கண்டா!
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
502தாழ் குழல் இன் சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று(வ்)
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன்? எந்தை பெம்மான்!
வாழ்வ தேல் அரிது போலும்; வைகலும் ஐவர் வந்து(வ்)
ஆழ் குழிப் படுக்க ஆற்றேன்-ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
503மாற்றம் ஒன்று அருள கில்லீர்; மதி இலேன் விதி இலாமை
சீற்றமும் தீர்த்தல் செய்யீர்; சிக்கனவு உடையர் ஆகிக்
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய,
ஆற்றவும் கில்லேன், நாயேன் ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
504உயிர் நிலை உடம்பே காலா, உள்ளமே தாழி ஆக,
துயரமே ஏற்றம் ஆக, துன்பக் கோல் அதனைப் பற்றி,
பயிர் தனைச் சுழிய விட்டு, பாழ்க்கு நீர் இறைத்து, மிக்க
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
505கற்ற தேல் ஒன்றும் இல்லை; காரிகையாரோடு ஆடிப்
பெற்ற தேல் பெரிதும் துன்பம்; பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய
அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
506பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன்; பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய் வினை பலவும் செய்ய,
மத்து உறு தயிரே போல மறுகும், என் உள்ளம் தானும்
அத்தனே! அமரர்கோவே! ஆரூர் மூலட்டனீரே!
உரை
   
507தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க, ஓடி இரிந்தன, பூதம் எல்லாம்;
முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி
அடர்த்து, அருள் செய்தது என்னே? ஆரூர் மூலட்டனீரே!
உரை