| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 10 - 4 |  | 
			
			| அரிய நான்மறை யோதிய நாவரோ பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
 விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ
 பெரிய வான்கத வம்பிரி விக்கவே.
 |  |  
			|  | 4 |  
			|  | பொ-ரை: அருமை உடைய நான்மறை அருளிய நாவுடையவரே! பெரிய புரம் எரியுண்ணுமாறு சுட்ட உயர்ந்த தேவரே! விரிந்த கோவண ஆடை கொண்ட மிகப்பழையவரே! பெரிய இக்கதவினைப் பிரித்தருள்வீராக. கு-ரை: அரிய - பொருள் உணர்தற்கு அரிய (நான்மறை). விரிகொள் - விரித்தலைக்கொண்ட. விருத்தர் - பழையோன்.
 |  
			|  |  |