| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 100 - 9 |  | 
			
			| தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர் ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
 பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
 மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
 |  |  
			|  | 9 |  
			|  | பொ-ரை:  பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர். கு-ரை:  அமுது - அன்பராயவர் உள்ளத்து ஊறும் இறைவன் திருவருள் மாயன் - திருமால்.
 |  
			|  |  |