| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 14 - 2 |  | 
			
			| மறையின் நாண்மலர் கொண்டடி வானவர் முறையி னால்முனி கள்வழி பாடுசெய்
 இறைவ னெம்பெரு மானிடை மருதினில்
 உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே.
 |  |  
			|  | 2 |  
			|  | பொ-ரை: வானவர்களும் முனிவர்களும் மறையின் முறையினால் புதிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்ற இறைவனும், எம்பெருமானுமாகிய இடைமருதூரில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்கும். கு-ரை: வேதவிதிப்படி (மறையின் முறையினால்) வானவர் முனிகள் வழிபாடு செய் இறைவன் என இயைக்க. உள்கும் - நினைக்கும்.
 |  
			|  |  |