|  | பொ-ரை:  அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளாவாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக. கு-ரை:  அண்டவாணர் - மேலுலகவாசிகளாகிய தேவர் முதலியோர். நீதியான் - நீதிவடிவினன். நின்மலன் - மலமற்றவன். வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய்.
 |