| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 43 - 6 |  | 
			
			| அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும் வல்ல வாறு சிவாய நமவென்று
 நல்லம் மேவிய நாத னடிதொழ
 வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
 |  |  
			|  | 6 |  
			|  | பொ-ரை: ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும், திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை வல்லவாறு  ழுசிவாயநம" என்று தொழுதால். வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும்.கு-ரை:  அல்லலாக - துன்பம் உண்டாக. வல்லவாறு - இயன்ற அளவு. வீடும் - அழியும். |  
			|  |  |