|  | பொ-ரை:  முறையாகத் தொழுவார்களது தலைவனும், துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும், வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக. கு-ரை:  நீதியால் - முறையாக. வாதை - துன்பம். விடுக்கும் - நீக்கும்.  7ஆவது பாடல் பின்னிரண்டு வரிகளே இங்கும் அமைந்து உள்ளன.
 |