| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 57 - 9 |  | 
			
			| மாலும் நான்முக னாலு மறிவொணாப் பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக்
 கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
 நீல கண்டனை நித்தல் நினைமினே.
 |  |  
			|  | 9 |  
			|  | பொ-ரை:  மாலும் பிரமனும் அறியவியலாத, பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக. கு-ரை:  அறிவொணா - அறியமுடியாத. பாலின் மென்மொழி - பாலனைய மென்மையான இனிய மொழி. நித்தல் நாடோறும்.
 |  
			|  |  |